இது சிரிக்கும் நேரம்!


இது சிரிக்கும் நேரம்!


வசூல்ராஜா எம்.பி.பி.எஸ்


டாக்டர் ஏன் அந்த பேஷண்ட டெஸ்ட் பண்ணாமலே திருப்பி அனுப்பிச்சிட்டாரு?
கூட வந்த அவர் மனைவி நீங்கதான் டாக்டர் எனக்கு மாங்கல்ய பிச்சை தரனும்னு கேட்டுட்டாங்கலாம்!.

டாக்டர் எனக்கு தூக்கமே வர மாட்டேங்குது!
ஏன் சுத்தி வளைக்கிறேள் ரிட்டையர் ஆயிட்டேன்னு சொல்லுங்க!
 
அந்த டாக்டர் போலின்னு எப்படி கண்டு பிடிச்சே?
ஒரு ஊசி போட்டுகிட்டா ஒரு ஊசி இலவசம்னு போர்டு வச்சிருக்கறத வச்சிதான்!

நோயாளி டாக்டரிடம்: டாக்டர் நீங்க பயந்த சுபாவம் உள்ளவர்தான் ஒத்துக்குறேண் ஆனா கண்ணை கட்டிகிட்டுதான் ஆபரேசன் பண்ணுவேன்னு அடம்பிடிக்கிறது கொஞ்சம் கூட நல்லா இல்ல !
 
அரசியல்வாதி டாக்டரிடம்: டாக்டர் நீங்க என்ன மட்டும் காப்பாத்திட்டீங்கன்னா
டாக்டர்: மக்களெல்லாம் என்ன கொன்னுடுவாங்கலே!

டாக்டர் என் பையன் 25 பைசாவ முழுங்கிட்டான்

காஸ்ட்லியா எதுவுமில்லயே!போனாப்போவுது கவர்மெண்ட் நாலணாவ திருப்பி வாங்கிடுச்சு!


அந்த டாக்டருக்கு இளகிய மனசுன்னு எப்படி கண்டு பிடிச்சே?

ஊசி போடுறதுக்கு முன்னாடி வாயில வாழப்பழத்த திணிச்சுட்டு
போடறத வச்சுதான்.

Comments

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2