இன்று கொண்டாடுவோம் இனிதாய்...!

இன்று கொண்டாடுவோம் இனிதாய்...!

ஏற்றுவோம் தீபஒளியை!-பறை
சாற்றுவோம் பாரதப்புகழை!

கூற்றுவனாய்க் கலவரங்கள்!
மாற்ற முடியா மனிதர்கள்!

ஏற்றி விடப்படும் சா‘தீ’
தூற்றி விடப்படும் வதந்‘தீ’

அட்டையாய் ஒட்டிய லஞ்சப் பேய்!
சட்டைக் கூட இல்லாத ஏழ்மை!

பட்டங்கள் தராத வேலை!
சட்டங்களில் உள்ள ஓட்டை!

கற்க மறுக்கும் அறியாமை!
நிற்க நிழலில்லா மனிதர்கள்!

போகப் பொருளாய் பெண்மை!
போக வழிதேடும் போதை!

ஆண்டுக் கொருமுறை தேர்தல்!
ஆண்டவன் பெயரால் சுரண்டல்!

எங்கும் எதிலும் ஊழல்கள்!
கங்குகரைக் காணா பூசல்கள்!

இவைதான் இந்தியாவைப்
பிடித்த இருள்கள்!

பாரதத்தின் முதுகில்
படிந்துவிட்ட கறைகள்!

காலம் காலமாய்
மறையாத் தழும்புகள்!

விலகட்டும் இந்த இருள்கள்!
பரவட்டும் புது ஒளிவெள்ளம்!

இன்று கொண்டாடுவோம்
இனிதாய் தீபாவளி!


இந்த கவிதை 1998 தீபாவளியில் எழுதப்பட்டது எனது கையெழுத்துப் பத்திரிக்கையில். இன்றும் பொறுத்தமாக இருப்பதால் வலைப்பூவில் பதிவிட்டுள்ளேன்! நன்றி!

Comments

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2