சென்ரியுவாய் திருக்குறள்

தளிர் சென்ரியுவாய் திருக்குறள் 6

புலனடக்கம்

கொடுக்கும்

பேரின்பம்.


ஐம்புலன்களை அடக்கி வாழ்பவன் பேரின்பத்தை அடைவான்.


தூய வாழ்க்கை

தொடர்பவன்

நிலைத்திருப்பான்


ஐம்பொறிகளை அடக்கி தூயவாழ்க்கை வாழ்கிறவனை பின்பற்றுகிறவன் உலகமழியும் வரை நிலைத்திருப்பான்

தளிர் சென்ரியுவாய் திருக்குறள் 7

உள்ளம்

குழந்தையானால் ஓடும்

மனக்கவலை.


கள்ளமற்ற குழந்தை உள்ளத்தை மனக்கவலை அண்டாது.


சாமியான ஆசாமிகளால்

கவலைப்பட்டான்

கடவுள்


மனக்கவலை தீர்க்கும் கடவுளுக்கே கவலை ஆசாமிகளால்! மனக்கவலையை கடவுளாலும் தீர்க்க முடியாது.

தளிர் சென்ரியுவாய் திருக்குறள் 8

ஓடக்கூலி உயரத்தில்ஏற்றம்

மாறவில்லை மனிதர் கூட்டம்

கோவில்களில் நீண்ட வரிசை


இறைவனை காண கட்டணங்கள் உயர்ந்தாலும் பக்தர்களுக்கு குறைவில்லை.


இதயத்தில் அன்பு

ஏற்றி விடுமே

இறைவன் திருவடி!


உள்ளத்தே அன்பு நிறைந்தவனுக்கு இறைவனின் திருவடி எளிதாக எட்டிவிடும்

தளிர் சென்ரியுவாய் திருக்குறள் 9

வணங்குதல்

தலைக்கு

அழகு


வணங்கும் பண்பு தலைமைக்கு அழகு சேர்க்கும்.

தளிர் சென்ரியுவாய் திருக்குறள் 10

பிடியில்லா

வாழ்க்கை

வழுக்கும்.


பிடிமானமில்லா வாழ்க்கை வாழ்வது கடினம் வழுக்கும்.


வாழ்க்கை கடல்

கரை சேர்த்தது

நம்பிக்கை படகு


தன் மீது நம்பிக்கை கொண்டவன் வாழ்க்கை எனும் கடலில் நீந்தி கரை சேர்வான்


தங்கள் வருகைக்கு நன்றி பதிவு குறித்த கருத்துக்களை பகிரலாமே!




Comments

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2