சுட்ட பழம்! சுவையான பழம்!


பிறர் மனம் புண்படாமல் பேசுவது ஒரு கலை.

நண்பரின் வீட்டிற்கு ஒருவர் சென்ற போதுஅவருக்கு ஒரு தட்டில் ஜிலேபி வைத்தார் நண்பரின் மனைவி.ஜிலேபியை இரண்டாக விண்ட போது அதில் நூல் போல் வந்தது.சிரமப்பட்டு அதை சாப்பிட்டு விட்டார்.நண்பர் கேட்டார்.''ஜிலேபி எப்படி இருந்தது?''இவர் சொன்னார்,'மிக நன்றாக இருந்தது.நான் தான் இரண்டு நாள் தாமதமாக வந்து விட்டேன்.'

நண்பர் மனைவியிடம் வாழைப்பழம் கொண்டு வந்து கொடுக்கச் சொல்ல அவரும் தட்டில் கொண்டு வந்து வைத்தார்.அது சற்றுக் காயாக இருந்தது.இதையும் சிரமப்பட்டு சாப்பிட்டார் வந்தவர்.நண்பர் கேட்டார்,''வாழைப்பழம் நன்றாக இருந்ததா?''வந்தவர் சொன்னார்,'நன்றாக இருந்தது.நான் தான் இரண்டு நாள் முன்னால் வந்து விட்டேன்.'


''சத்து குறைந்து போச்சுன்னு டாக்டர் கிட்ட போனீங்களே,என்ன ஆச்சு?''

'இப்போ என் சொத்து குறைந்து போச்சு.'


நாராயணாசாமிக்கு திருமணமான புதிது.

எப்பொழுது கோவிலுக்குச் சென்றாலும் அங்கிருக்கும் பிச்சைக்காரர் ஒருவருக்கு காசு போடுவது நாராயணசாமியின் வழக்கம்.

அன்றும் அப்படித்தான். இவர் ஒரு பிச்சைக்காரனுக்கு காசு போட, அவன் கேட்டான்.

"ஏன் சாமி, முன்னாள் 15 ரூபாய் பிச்சை போட்டுக் கொண்டிருந்தீர்கள். அதன் பின் 10 ரூபாய் பிச்சை போட்டீர்கள். இன்று வெறும் 5 ரூபாய் போடுகிறீர்களே?அது ஏன்?"


நாராயணசாமி சொன்னார்

"திருமணமாகும் முன் என் விருப்பத்திற்குச் செலவு செய்தேன்.அப்போது 15 ரூபாய் போட்டேன். திருமணம் ஆனவுடன் செலவு அதிகம் ஆனது 10 ரூபாய் போட்டேன். நேற்று எனக்கு ஒரு குழந்தை பிறந்தது. குடும்பம் நடத்தப் பணம் வேண்டும் இல்லையா? அதனால்தான் 5 ரூபாய் போடுகிறேன்."

அதற்கு அந்த பிச்சைக்காரன் சொன்னான்,

"
ஏன் சாமி.. அப்படின்னா என் காசை வைத்துத்தான் நீங்கள் குடும்பம் நடத்துகிறீர்களா?...உங்களுக்கு வெட்கமாக இல்லையா?"


ஒரு பையன் பக்கத்தில இருந்த கடைக்கு போய்,

5 ரூபாய்க்கு கடலை மிட்டாய் கேட்டான். 

கடைக்காரர் அலமாரியின் மிக உயரத்தில் இருந்த மிட்டாய் பாட்டிலை மிக சிரமப்பட்டு அலமாரி மீது ஏறி எடுத்து, அவனுக்கு மிட்டாயினை கொடுத்துவிட்டு மீண்டும் உரிய இடத்தில் வைத்துவிட்டார்.

10 நிமிடம் கழித்து மீண்டும் அதே பையன், மீண்டும் 5 ரூபாய்க்கு கடலை மிட்டாய்.

கடைக்காரர் அதே சிரமத்துடன் கொடுத்துவிட்டு பாட்டில வைத்து விட்டார்.

மீண்டும் 5 நிமிடத்தில் அவன், மறுபடியும் 5 ரூபாய்க்கு. கடைக்காறருக்கு முடியல........
எடுத்துக் கொடுத்துவிட்டு.. பையன் திரும்ப வருவான் வந்தா கொடுக்க லேசு என்று மிட்டாய் பாட்டிலை கீழே வைதுக்கொண்டார்.

அவர் எதிர்பார்த்த படி பையன் ஐந்து நிமிசத்தில் ஆஜர். கடைக்காரர், பையனிடம், என்ன 5 ரூபாக்கு கடலை மிட்டாயா? என்றார். பையன் இல்லை என்று தலையாட்டினான்.
அப்பாடா கடலை மிட்டாய் மேட்டர் ஓவர், எனற நிம்மதியுடன், மிட்டாய் பாட்டிலை கஸ்டப்பட்டு ஏறி வைத்து விட்டு, பையனிடம் திரும்பி, என்ன வேணும் என்றார், அவன் சொன்னான், 10 ரூபாய்க்கு கடலை மிட்டாய்..

கடைக்காரர் பாடு

நேத்து பீச்ல நாம பேசிக்கிட்டு இருந்ததை எங்கம்மா
பார்த்துட்டாங்க, நல்ல வேளை, தாடி வச்சிருந்ததால
நீங்க தப்பிச்சீங்க..."

"அப்படியா,என்ன சொன்னாங்க!?"


"நல்ல நாளும் பொழுதுமா சீக்கிரம் வீட்டுக்கு வராம,

ராப்பிச்சைக்காரனோடு உனக்கு என்ன பேச்சுனு
திட்டினாங்க...!"

இரண்டு தந்தைமார்கள் தங்களுக்கள் பேசிக்கொண்டார்கள்.

ஒருவர்:என் மகன் கடிதம் எழுதினால் கடிதத்தைப் படிக்க எப்போதும் அகராதியைத் தேடித் போக வேண்டியிருக்கிறது.

மற்றவர்:உங்கள் மகனாவது பரவாயில்லை.என் மகன் கடிதம் எழுதினால் நான் வங்கியை அல்லவா தேடிப் போக வேண்டியிருக்கிறது!

ஒரு தடவை ஒருத்தர் ,கலைவாணர்கிட்டே வந்து...

ஐயா... என் குழந்தை செத்துப் போச்சு! ன்னு சொல்லி அழுதார். உடனே இவரு அவருக்கு நூறு ரூபாய் பணம் கொடுத்துஇந்தாங்க... அடக்கம் செய்யுங்க!ன்னு சொல்லி அனுப்பிவைச்சார்.

ஒரு வருசம் கழிச்சு மறுபடியும் அதே
 ஆள் வந்தார். இவறு மறந்திருப்பார்ங்கற நினைப்பிலேஅண்ணே...
என் குழந்தை இறந்து போச்சண்ணே! ன்னார் இவரு மறுபடியும் நூறு ரூபாய் கொடுத்து ஆறுதல் சொல்லி அனுப்பினார்.

ஏழெட்டு மாசம் கழிச்சு மறுபடியும் அதே ஆள் வந்தார். அவரு வாயைத் திறக்கறதுக்க முன்னாடியே இவரு நூறு ரூபாயை அவரு கையில வெச்சுபோன ரெண்டு தடவைதான் குழந்தை செத்துப்போச்சுஇந்தத் தடவையாவது சாகாமக் காப்பாத்திடுங்க! ன்னார். அதுக்கப்பறம் அந்த ஆள் வர்றதே இல்லையாம்
.                               நன்றி: ரிலாக்ஸ் ப்ளிஸ் முகநூல் பக்கம்.                                              தங்கள் வருகைக்கை நன்றி பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்!

Comments

  1. ஆஹா , ஒவ்வொன்றும் முத்து போல அருமை !
    ரசித்து சிரித்தேன் ! தொடரவும் !

    ReplyDelete
  2. எல்லா நகைச்சுவையும் ரசிக்க முடிந்தது. குறிப்பாக இரண்டு நாள் முன், பின் நகைச்சுவை..

    ReplyDelete
  3. சிரிக்க வைத்த நகைச்சுவை துணுக்குகள்

    ReplyDelete
  4. எல்லா நகைச்சுவையும் அருமை அண்ணா

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!