கொஞ்சம் சிரியுங்க பாஸ்! பகுதி 72

கொஞ்சம் சிரியுங்க பாஸ்! பகுதி 72


1.   எங்க தலைவர் கூட்டணி கட்சிகளை சேர்த்து அணைக்கிறதிலே கில்லாடி!
எங்க தலைவர் கூட்டணியை சேர்த்து அழிக்கிறதுல கில்லாடி!

2.   வேலைக்காரிக் கூட என்ன சண்டை?
பத்து பாத்திரம் தேய்க்கணும்னு சொன்னீங்க இப்ப நிறைய பாத்திரங்களை போட்டிருக்கீங்களேன்னு கேக்கறா!

3.   மன்னருக்கு போர் என்றாலே அலர்ஜி…!
அதற்காக “போர்”வையை கூட யூஸ் பண்ண மாட்டேன் என்று அடம்பிடித்தால் எப்படி…?


4.   அந்தப் புரத்தில் இருந்து சீட்டி ஒலி கேட்கிறதே எதற்கு மந்திரியாரே…!
உங்கள் அரசவை டூட்டி முடிந்துவிட்டது என்று ராணியார் சீட்டி அடித்து நியாபகப்படுத்துகின்றார் அரசர் பெருமானே!

5.   தன்னோட ரீலீஸ் தேதியை தள்ளி வைக்கணும்னு கபாலி கேட்டுகிட்டு இருக்கானா எதுக்கு?
கபாலி படம் ரிலீஸ் ஆகறப்போ தானும் ரிலீஸ் ஆனா தனக்கு கூட்டமே சேராதுன்னு நினைக்கறானாம்!

6.    தலைவர் கட்சியை தன் கைக்குள்ளேயே வச்சிக்கிட்டிருக்கிறதா சொல்றியே எப்படி?
விரல் விட்டு எண்ணக் கூடிய அளவுலதான் கட்சியிலே மெம்பர்ஸ் இருக்காங்கன்னு சொல்ல வந்தேன்.

7.   தலைவர் ஏன் கோபமா இருக்காரு?
அவருக்கு வந்திருக்கிற குற்றப்பத்திரிக்கையிலே தன்னோட சமையல் குறிப்பை போட முடியுமான்னு வீட்டம்மா கேட்டு நச்சரிக்கிறாங்களாம்!

8.   இந்த சம்பந்தம் நழுவி போயிட கூடாதுன்னு பொண்ணுவீட்டுக்காரங்க குறியா இருக்காங்க!
அதுக்காக உட்கார்ற சோபாவுல பெவிக்கால் ஊத்தி வைக்கிறது எல்லாம் ரொம்ப ஓவர்!

9.   அந்த பஸ்ல என்னப்பா டைம் பாஸ் ரைடர்னு எழுதி இருக்கு…?
எல்லா ஊருக்குள்ளேயும் புகுந்து புகுந்து நிதானமாத்தான் போய் சேருமாம் அதை சிம்பாலிக்கா போட்டிருக்காங்க!

10.  அப்பா என்னை ஒரு பையன் காதலிக்கிறதா சொல்றான்!
வெட்டிப் போட்டுருவேன்!
அவனும் அதைத்தான் சொல்றான்…!

11. நெருப்புன்னு  படத்தோட டீசரை வெளியிட்டோமே வரவேற்பு எப்படி இருக்கு?
பேஸ்புக்கிலேயும் டிவிட்டர்லயும்  ஊதி ஊதியே பத்தவைச்சுட்டாங்க!


12.   அந்த டாக்டர் பேஷண்ட்ஸ்கிட்ட ரொம்ப வாஞ்சையா இருப்பாராமே!
பின்னே அவர் ஆஞ்சியோ ஸ்பெஷலிஸ்ட் ஆச்சே! அப்பத்தானே பீஸை கலெக்ட் பண்ண முடியும்?

13.  லைசென்ஸ், ஆர்சிபுக், இன்ஷூரண்ஸ், ஹெல்மெட் எதுவுமே இல்லாமா எப்படி வண்டி ஓட்டிக்கிட்டு வர்றே?
  திருடிக்கிட்டு வரும்போது இதையெல்லாம் தேடி எடுத்துகிட்டு வரமுடியுமா சார்?

14.  அந்த ஆள் இப்படி நம்ம மேனேஜரை கழுவி கழுவி ஊத்தறாரே யாரு அவரு?
எதிர்த்த டீக்கடையிலே டீ மாஸ்டரா இருக்காராம்!

15. என்னடா உன்னோட முதுகு இப்படி வீங்கி கிடக்குது…!
நான் எது செஞ்சாலும் என்னோட பொண்டாட்டி தட்டிக் கொடுத்து பாராட்டுவான்னு ஏற்கனவே சொல்லி இருக்கேன் இல்லே…!

16.  அவர் பெரிய ரஜினி ரசிகராம்!
இருக்கட்டுமே! அதுக்காக சிகரெட்டை வாயிலே வச்சிக்கிட்டு கபாலிபெட்டி கொடுங்கன்னு கேக்கறதெல்லாம் ரொம்ப அதிகம்!

17. மன்னர் ஏன் புலவர் மீது கோபமாக இருக்கிறார்?
புறமுதுகிட்டு வந்த மன்னரை “பின்னழகை காட்டி பீடு நடை போட்ட மன்னவா வாழி! என்று பாடிவிட்டாராம்!

18.  ஆனாலும் இந்த பையனுக்கு வாய்க்கொழுப்பு அதிகமா போச்சு சார்!
  ஏன் என்ன ஆச்சு?
பரிட்சையில முட்டை மார்க் போட்டதும் எப்பவும் முட்டையே போடறீங்களே ஆம்லெட் ஆஃப் பாயில்னு போடக் கூடாதான்னு கேக்கறான்!

19. ரிலீஸ் தேதி அறிவிச்சும் இன்னும் ஏன் விடுதலை பண்ணலைன்னு கைதி போராட்டம் பண்றான் சார்!
  அவன் பேரு என்ன?
கபாலி!

20. ராணியார் கிழித்த கோட்டை மன்னர் தாண்ட மாட்டார்!
    ஏன் அப்படி?
தாண்டினால் அவர் தோல் கிழிந்துவிடும் என்ற பயம்தான் காரணம்!


21. சுயம்வரத்துக்கு சென்ற மன்னர் வில்லை வளைத்தாரா?
  இளவரசியை வளைக்கப்போய் முதுகை ஒடித்துக்கொண்டு வந்து விட்டார்!

22. அந்த ஆஸ்பிடல்ல சேருவதற்கு யார் துணையும் தேவை இல்லை ஆனா வெளியே வரனும்னா நாலுபேரோட உதவி தேவை!
      ஏன் அப்படி?
செத்ததுக்கு அப்புறம் தூக்கிறது நாலுபேர் வேணும் இல்லையா?

23. கட்டிக்க போற பொண்ணுகூட வாட்ஸ் அப்ல சாட் பண்ணது தப்பா போயிருச்சு!
       ஏன்?
 லெப்ட் ஆக்கிவிட்டுட்டு போயிட்டா!

24. டிராபிக் கான்ஸ்டபிளை கல்யாணம் பண்ணிக்கிட்டது தப்பா போச்சுன்னு எதுக்குச் சொல்றே?
   எந்த வழிக்கு போனாலும் குறுக்கே கைய மறிச்சுக்கிட்டு வந்து நிக்கிறாரே!

25. வருமானத்துக்கு அதிகமா சொத்து சேத்த வழக்குலே நீதிபதி தீர்ப்பை படிச்சதும் தலைவர் எதுக்கு வருத்தப்படறார்!
    குறைச்சு எடை போட்டுட்டாங்களாம்!



தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை பின்னூட்டத்தில் தெரிவித்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!


Comments

  1. இரசித்து ரொம்பவே சிரித்தோம்
    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. 1, 5,6,10, 13,17,21, மிகவும் இரசித்தேன் நண்பரே

    ReplyDelete
  3. ஹஹஹ்ஹ்ஹ சுரேஷ் 10 மட்டும் கொஞ்சம் உறுத்துகிறது..ரசிக்க முடியவில்லை

    ReplyDelete
  4. ரசித்தேன் அருமை!

    ReplyDelete
  5. வெட்டிப் போடும் துணுக்கு மட்டும் வேதனையை ஏற்படுத்தியது. மற்றவற்றை ரசித்தேன்.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!